களைகட்டிய கபடி ஆட்டம்! 2 வது வெற்றியை பதிவு செய்த தமிழ் தலைவாஸ் கபடி அணி
புரோ கபடி சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் கபடி அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 2 வது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது.
தமிழ் தலைவாஸ்;
9-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின்
இறுதியில் 38-27 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு நரேந்தர் தான் மிக முக்கிய காரணமாக இருந்தார். இவர் தனது அட்டகாசமான ரெய்டுகளின் மூலம் 13 புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி
தற்போது 2வது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதற்கு அடுத்து நடந்த கபடி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியிலும் தன்னுடைய அபார திறமையை வெளிப்படுத்திய நரேந்தர் 24 புள்ளிகளை குவித்தார்.
இறுதியில் 49 - 39 என்ற புள்ளி கணக்கில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.
தமிழ் தலைவாஸ் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3 வெற்றி ஒரு டிரா நான்கு தோல்வி என்று புள்ளி பட்டியலில் பதினோராவது இடத்தில் நீடிக்கிறது.
இன்னும் 14 லீக் சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில் தமிழ் தலைவாஸ் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
02/11/2022 அன்று நடைபெறும் அடுத்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ்!
#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #VivoProKabaddi
0 Comments